புதிய பிரதமர் மஹிந்த ராஜப க் ஷ வுக்கு எதிராக கடந்த புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது குரல் பதிவு மூலமான வாக்கெடுப்பு சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் மேற்கொள்ளப்பட்டு அப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
எனினும் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும்தரப்பு குரல் மூலமான வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறியுள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளில் குரல் மூலமான வாக்கெடுப்பு தொடர்பில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் இது சம்பந்தமான விளக்கம் உள்ளது.
அதாவது பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளில் 47,47(1) ஆம் சரத்துக்களில் சபாநாயகரினால் கேள்வி கேட்கப்பட வேண்டும். அதன் போது உறுப்பினர்களால் ஆமோதித்தல் அல்லது நிராகரித்தல் என்பது குரல் மூலமாக வெளிப்படுத்தப்படும் அதனை வாக்குகளாகப் பெற்றுக் கொண்டு சபாநாயகரினால் பெறுபேறுகள் தெரிவிக்கப்படும்.
நிலையியல் கட்டளை 47 இல் தெரிவிக்கப்பட்டிருப்பதன் பிரகாரம் ஏதாவது ஒரு உறுப்பினர் பெயரின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டால் சபாநாயகர் அதற்கு இடமளிக்க வேண்டும் என்பதாகும். 2011 ஜூன் 21 ஆம் திகதி ஹன்சார்ட் அறிக்கை 1523 ஆம் பக்கத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM