மாலைதீவில் அன்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேரிதலில். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக இன்று அவர் பதவியேற்றார்.
குறித்த பதவியேற்பு நிகழ்வு மாலைதீவு தலைநகர் மாலேவில் நடைபெற்றது.
இந்நிலையில் மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இப்ராகிம் மொகமது சாலிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மோடிதனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மாலைதீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM