கசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் - ராஜித

Published By: Vishnu

16 Nov, 2018 | 07:32 PM
image

இன்று சபையில்  காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அத்துடன், கசிப்பு விற்பவர்களும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களும், எத்தனோல் கடத்தியவர்களும், மீன் விற்பனை செய்தவர்களுமே இவர்கள். இவர்களுக்கும் பாராளுமன்றத்தில்  எவ்வாறு நடந்துக்கொள்வதென்பது  தெரியாது. 

இவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டில்  சபாநாயகர் அஞ்சிவிடுவார் என்று எண்ணினார். ஆனால், பிரித்தானியாவில் நான்கு சபாநாயகர்கள் தமது உயிரை அர்ப்பணித்து ஜனநாயகத்தை  பாதுகாத்தது போன்று எமது சபாநாயகரும் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளார்.  

மேலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டபோது பெரும்பான்மை பலம் உள்ளதாக கூறினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தவுடனே ஜனநாயகத்துக்கு  மதிப்பளித்து இவர் பதவி விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து அராஜகத்தை கையில் எடுக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாரளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09