"சபாநாயகர் என்ன கூறினாலும் மஹிந்தவே பிரதமர்"

Published By: Digital Desk 4

14 Nov, 2018 | 06:46 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும், சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர், நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என ஆளும்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களையும், நிலையியற் கட்டளைகளையும் மீறி பலவந்தமாக அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 

நிலையியற் கட்டளைகளை மீறி சபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பு செல்லுப்படியற்றதாகும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த  மாதம் 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த  ராஜபக்ஷவை  நியமித்து அமைத்திருந்த புதிய அரசுக்கும், பிரதம அமைச்சருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 பெரும்பான்மை வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டிருந்தது. 

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று பாராளுமன்ற  குழு அரையில் இதன்போதே ஆளும் தரப்பு எம்.பி.க்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இச் சந்திப்பில் சபை முதல்வர் தினேச் குணவர்தன, நிமல் சிறிபாலடி சில்வா, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜெயந்த, பந்துல குணவர்தன, பைஸர் முஸ்தபா, கெஹெலிய ரம்புக்வெல உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27