ரணில் நிரூபித்து காட்டினால் மஹிந்த இராஜினாமா செய்வார் : நாமல்

Published By: Digital Desk 7

14 Nov, 2018 | 05:39 PM
image

"சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதையடுத்து பாராளுமன்றம் தற்காலிகமாக நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே நாமல்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு,

“கடந்த மூன்றரை ஆண்டுகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறான பக்கசார்பான செயற்பாடுகளேயே செய்து வருகிறார்.

நிலையியற் கட்டளைகளை மீறி அரசியலமைப்பிற்கு எதிராக ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாகவும் அவரது செயற்பாடுகள் காணப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு 113 பலம் இருப்பதை நிரூபித்து காட்ட முடியும் என்றால் ஆவணம் ஒன்றை கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க வேண்டும்.

அவ்வாறான நிலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்வார். மாறாக இவ்வாறான காரியங்களில் ஈடுபட கூடாது.

இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது.

அதனால் சபாநாயகரின் செயற்பாடுகளில் எமக்கு நம்பிக்கை இல்லை அவரின் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40