இந்நாட்களில் உடற்பயிற்சி வேண்டாம் : காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

Published By: Robert

22 Mar, 2016 | 03:30 PM
image

நாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் இந்த வெப்ப காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகளின் இருதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உடலில் நீர் குறைவடைவதனால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருப்பதனை தவிர்ப்பதுவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீரைப் பருகுவதும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் மழைவீழ்ச்சி இன்மையே அதிக வெப்பத்திற்கு காரணம் எனவும் இன்னும் ஒரு மாதத்தில் எதிர்பார்த்தளவு மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் காலநிலை திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.ஜே.பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா பிரதேசத்தில் அதிகமாக 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும், அனுராதபுரத்தில் 35 பாகையும், கொழும்பில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 16:39:27
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:54:57
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03
news-image

மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர்...

2023-11-29 16:25:18
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது...

2023-11-29 16:25:09
news-image

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இலக்கு...

2023-11-29 16:24:18
news-image

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 2.20 கோடி ரூபா...

2023-11-29 16:17:58