ஜனாதிபதி முன்னதாக அறிவித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதாக சபாநாயகர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு குறித்து சபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி முன்னதாக அறிவித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றது.
பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமானபோது நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான யோசனையொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டு வந்ததாகவும், அந்த யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் விஜத்த ஹேரத் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைத்ததாகவும், அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததாகவும் சபாநாயகர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு விடுத்த முன்மொழிவினை முன்வைத்ததுடன், அதற்கும் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தாகவும் சபாநாயகர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM