அலரி மாளிகைக்கு எதிரான பலத்தை திங்கட்கிழமை காண்பிப்போம்:ஸ்ரீ.ல.சு.க யின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் 

Published By: R. Kalaichelvan

09 Nov, 2018 | 04:53 PM
image

(நா.தனுஜா)

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினை நாங்கள் வரவேற்கின்றோம். எமது தேவைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவும் தொழிற்சங்கங்களின் பலத்தினை நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் 12ஆம் திகதி 'நாட்டைப் பாதுகாப்பதற்கான உழைக்கும் மக்களின் பலம்" எனும் தொனிப்பொருளில் சுகததாச விளையாட்டரங்கில் ஒன்றுகூடவுள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர்கள் மேலும் கூறுகையில், 

கடந்த மூன்று வருடங்களாக அனைத்துத்துறை சார்ந்த தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கித் தமது தேவைகளுக்காகப் போராடி வருகின்றனர். 

தேசிய அரசாங்கத்தில் எமது தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. 

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது எமது பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வளிக்கப்பட்டது எனக் கூறமுடியாவிடினும், அவர் எமது தேவைகள் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார்.

எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்பட்டுள்ளமையினை வரவேற்கின்றோம். 

அத்தோடு எதிர்வரும் 12ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் தொழிற்சங்கங்களின் பலத்தை வெளிக்காட்டும் வகையிலும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஒன்றுகூடவுள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51