மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக 5775 குடும்பங்களை சேர்ந்த 20187பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மா .உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.
நான்கு நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 10 நலன்புரி நிலையங்கள் உண்டாக்கப் பட்டு இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றனர்.
10 நலன்புரி நிலையங்களிலும் 708 குடும்பங்களை சேர்ந்த 2400பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் வாகரையில் 8 நலன்புரி முகாம்களும் வாழைச்சேனையில் 1 முகாமும் கோரளை பற்று மத்தியில் 1 முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
10 முகாம்களிலும் 1268குடும்பங்களை சேர்ந்த 4300பேர் இடம் பெயர்ந்துள்ளதுடன் பல பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சில பிரதேசங்களில் படகு சேவைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் 3 நாட்களுக்கான உளர் உணவு பொருட்களும் வழங்கப் பட்டுள்ளது.
புனானை யில் ஏற்ப்பட புகையிரத போக்குவரத்து தற்போது சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால் கரையோரங்களில் வாழ்கின்ற மீனவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM