கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாளங்களில் பெய்த மழை காரணமாக கிளிநொச்சிக் குளங்களின் வாசிப்பு இரணைமடுக்குளம் 26 அடியாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும் கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும் முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும் பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும் குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும் வன்னேரிக்குளம் 10 அடியாகவும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 19.8 அங்குலமாக இருந்த நிலையில் இன்று வெகுவாக மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
இந்நிலையில் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் சிலவற்றினுள் வெள்ளம் உட்சென்றுள்ளது. அதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வாழும் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் கிளிநாச்சியில் உள்ள 7 ஆவது காலாற்படையினரால் 11 குடும்பங்களை செர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறுவர்கள், பெண்கள், வயது முதரிந்தவர்கள் தொடர்பில் அவர்களை மீட்பதற்காக விரைந்த படையினர், குறித்த குடும்பங்களிற்கான உடனடி உணவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM