இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆயுதத்தால் பேச முயற்சித்தவர்களுக்கும், இராணுவத்துக்குமே பிரச்சினைகள் இருந்தன என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஒழுங்கமைப்பில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவைகள் வழங்கும் நிகழ்வும், யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கு கௌரவ பட்டம் வழங்கும் நிகழ்வு நேற்று பலாலியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
30 வருடங்கள் துரதிஷ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடத்தியது. அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
போர் காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்களை சந்தித்தார்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும். 30 வருடகால போரில் பல அழிவுகள் இடம்பெற்றதும் தெரியும். அவற்றை 9 வருடங்களில் மீட்டெடுக்க முடியாது.
ஆனால் இராணுவத்தால் முடிந்தளவு மீட்டுக் கொடுப்பதற்கு இராணுவம் முயற்சிக்கும். அந்த முயற்சியில் 100 வீதம் இராணுவம் முயற்சிக்கும். குறிப்பாக இராணுவம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது, மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்கிறது,
வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கும் மேலாக இராணுவத்தின் வசம் உள்ள காணிகளில் கூட அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தென்னை மரங்களையும், பனை மரங்களையும் இராணுவம் நாட்டியிருக்கின்றது.
இதேபோல் கரையோர வள பாதுகாப்பு மற்றும் வனவள பாதுகாப்பு போன்றவற்றிலும் இராணுவம் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகின்றது. யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM