வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் சுட்டி காட்டிய போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மழை தொடங்கியுள்ள நிலையில் நெளுக்குளம், இராசேந்திரங்குளம், பாரதிபுரம், குளுமாட்டுச்சந்தி, உக்கிளாங்குளம், கூமாங்குளம் போன்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் கட்டாகாலி மாடுகள் வீதிகளில் நிற்பதால் போக்குவரத்து செய்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பில் பிரதேசபை ஒலிபெருக்கியில் அறிவித்த போதும் எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, பிரதேச சபை ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM