பிரதமர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பையே ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நளின்பண்டார தயாகமகே பாலித தேவப்பெரும ஆகியோர் இந்த வேண்டுகோள் அடங்கிய கடிதமொன்றினை பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் வழங்கியுள்ளனர்.
நாங்கள் அலுவலகத்திற்கு சென்றவேளை அங்கு பொலிஸ்மா அதிபரோ வேறு எந்த சிரேஸ்ட அதிகாரியோ இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அங்கு காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் கடிதத்தை கையளித்துவிட்டு பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளார் இதன் காரணமாக பிரதமரிற்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவரிற்கு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளோம் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
26 ம் திகதிக்கு முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கும் அமைச்சர்களிற்கான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM