புலிகளுக்கு நான்  பணம் வழங்கவில்லை

Published By: MD.Lucias

19 Mar, 2016 | 07:04 PM
image

 (ரொபட் அன்டனி)

புலி­க­ளுக்கு நாம் பணம் வழங்­க வில்லை. எங்­க­ளுக்கு அவர்­க­ளுடன் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை. புலிகள் இவ்­வாறு பணம் வாங்­கி­னார்கள் என்று கூறு­வது தமிழ் மக்­க­ளுக்கு செய்­கின்ற பாரிய அகௌ­ர­வ­மாக இருக்­கின்­றது என்று  முன்னாள்  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும்  மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சகோ­த­ர­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார். 

வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு;

 

கேள்வி: தற்­போது என்ன செய்­து­கொண்­டி­ருக்­கின்­றீர்கள்? 

பதில்: நாங்கள் தற்­போது  50 வீத அர­சி­ய­லுக்கும்  50 வீதம் வழக்­கு­க­ளுக்­கா­கவும்  காலத்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம்.    அர­சியல் ரீதியில் வேட்­டை­யா­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம் என்று கூறலாம்.

  

கேள்வி: அதா­வது உங்கள் ஆட்­சி­யின்­போது எவ்­வி­த­மான தவ றும் செய்­ய­வில்லை என்று கூறு­கின்­றீர்­களா? 

பதில்: தவறு செய்­வது என்­பதும்  அர­சியல் தவ­று­களை செய்­வது என்­பதும் இரண்டு விட­யங்­க­ளாகும்.   அர­சியல் ரீதி­யான குறை­பாடுகள் என்­பது  இடம்­பெ­றலாம். இது எந்த அர­சி­யல்­வா­தி­யி­டமும் இருக்­கலாம்.  ஆனால் இங்கு அவ்­வாறு இல்லை.   இங்கு என்ன நடை­பெ­று­கின்­றது என்றால்   சில  பேரை தெரிவு செய்து அர­சியல் வேட்­டை­யா­டு­கின்­றனர். 

கேள்வி: நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்து குறிப்­பிட முடி­யுமா? 

பதில்:நாட்டில்  கடந்த வருடம்  வாழ்க்கை முறை­யா­னது   வீழ்ச்­சி­ய­டைந்­து­விட்­டது.   விவ­சாயம் வீழ்ச்­சி­கண்­டுள்­ளது.  வடக்கில் மீன­வர்­களின்  வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மீன­வர்­களின்  மீன்­வளம் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டும்­போது   அர­சாங்கம்  மௌன­மாக இருக்­கின்­றது.   இவ்­வாறு பல வழி­க­ளிலும்  மக்கள்  பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

ஆனால்   சில விட­யங்­களில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­த­னையும் நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.   எரி­பொ­ருட்­களின் விலை   குறைக்­கப்­பட்­டுள்­ளது.  ஆனால்  உலக சந்­தையில்  எரி­பொ­ருளின் விலை குறை­வ­டையும்  அள­வுக்கு  வழங்­கப்­ப­ட­வில்லை.    அத்­துடன்  அரச ஊழி­யர்­க­ளுக்கு  கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.    ஆனால் அதனை   அடிப்­படை   சம்­ப­ளத்தில் இணைக்­க­வில்லை.  எவ்­வா­றெ­னினும்  அர­சாங்­கத்தின் இந்த செயற்­பாட்டை  பாராட்­ட­வேண்டும். 

 நாட்டில் கடந்த காலங்­களில் பாரிய  அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  ஆனால் அவை தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளன.  நாங்கள் ஆரம்­பித்த அபி­வி­ருத்தி திட்­டங்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. வடக்கு அதி­வேக பாதை  செயற்­பா­டுகள்  நிறுத்­தப்­பட்­டுள்­ளன.  நாட்டின்  முழுப் பொரு­ளா­தா­ரமும்  முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.  ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­கண்­டு­வ­ரு­கின்­றது. பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் குறை­வ­டைந்­துள்­ளது. வெளி­நாட்டு ஒதுக்­கீடு குறை­வ­டைந்­துள்­ளது. 

மின்­சார விநி­யோ­கத்தில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. மின்­சார தடை ஏன் ஏற்­பட்­டது?  மின்­சார தடை ஏற்­பட்­ட­மைக்கு  நிர்­வாக திறன் இன்­மையே கார­ண­மாகும். எமது நாட்டில்  தேவை­யான மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றது. எனவே  தடை ஏற்­ப­ட­வேண்­டிய  அவ­சி­ய­மில்லை. சேவையில் அர்ப்­ப­ணிப்பு இல்­லா­மையே  இதற்கு கார­ண­மாகும்.    

இதே­வேளை  இந்த அர­சாங்­கத்­துக்கு பாரிய  சர்­வ­தேச ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது. இந்­தியா அமெ­ரிக்கா மற்றும்  ஐரோப்­பிய நாடு­களின் ஆத­ரவை  அர­சாங்கம் பெற்­றுள்­ளமை சிறந்த விட­ய­மாகும். ஆனால்  தேவை­யில்­லாமல் சில நாடு­க­ளுடன்   உறவை   குழப்­பிக்­கொண்­டுள்­ளது. 

கேள்வி: எவ்­வா­றான நாடு­க­ளுடன்? 

பதில்: சீனா போன்ற நாடு­க­ளுடன் உறவு   குழப்­பிக்­கொள்­ளப்­பட்­டது.

 

கேள்வி: எனினும் பொது­வாக தற்­போது  சர்­வ­தேச உறவு சிறந்­த­தாக உள்­ள­தாக  கூறு­கின்­றீர்­களா? 

பதில்: அது  எதிர்­வரும் காலங்­களில்  உறவு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை வைத்தே கூற முடியும். ஒரு தரப்­புக்கு மட்டும் நன்மை ஏற்­படும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது. ஆனால் இவ்­வாறு   சர்­வ­தேச உறவு பலப்­ப­டுத்­தப்­பட்­டமை சிறந்த விட­ய­மாகும். 

மேலும்   முதற்­த­ட­வை­யாக  தமிழ்த் தரப்பின்   பிர­தி­நி­தி­யான  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிக்­கின்­றது. கடந்த காலங்­களில் தேசியப் பிரச்­சி­னையை தீர்க்க தமிழர் தரப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டவே இல்லை.

ஆனால் முதற்­த­ட­வை­யாக தமி­ழர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணைந்து பய­ணிக்­கின்­றது. இது பாரிய வெற்­றி­யாகும். ஆனால் அதனை உரிய முறையில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். இந்த விட­யத்தில் இரண்டு தரப்பும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். இது சிறந்த சமிக்­ஞை­யாகும். கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து கொண்டு முன்­னெ­டுக்கும் வகி­பா­கத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எதிர் கட்சித் தலை­வ­ரென்றால் அவர் முழு நாட்­டி­னதும் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை.  

கேள்வி: உங்கள் அர­சாங்க காலத்­திலும் இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் பிரச்­சினை காணப்­பட்­டது தானே ? நீங்கள் அதனை  தீர்க்­க­வில்­லையே? 

பதில்:நாங்கள் இந்த விட­யத்தில் தலை­யிட்டோம். ஆனால் கூட்­ட­மைப்பு இந்­தி­யாவின் சார்­பாக செயற்­பட்­டது. தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் இந்­தி­யாவின் பக்­கத்தை எடுத்தால் நாம் எவ்­வாறு இந்தப் பிரச்­சி­னைகள் குறித்து  பேசு­வது? 

கேள்வி:  உங்கள் தரப்பு புதிய கட்­சியை ஆரம்­பிக்கப் போவ­தாக கூறுப்­ப­டு­கி­றது. அதில் உங்கள் பங்­க­ளிப்பு என்ன?  

பதில்: ஒரு விட­யத்தை சரி­யாக விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று ஒரு தரப்பு அர­சாங்­கத்தை  நடத்­து­கின்­றது. பல கட்­சிகள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றன. எதிர்க்­கட்­சி­யான கூட்­ட­மைப்பும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வா­க­வுள்­ளது. ஒரு­வ­கையில் கூறு­வ­தென்றால் ஜே.வி.பி.யும் அந்தப் பக்­கமே உள்­ளது. இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பும்  நாட்­டி­லுள்­ளது. அந்த மக்­க­ளுக்­காக யார் குரல் கொடுப்­பது? அதற்­காக ஒரு அர­சியல் முன்­னணி அல்­லது  அமைப்பு தேவைப்­ப­டு­கி­றது. இது மக்­களின் கோரிக்­கை­யாக இருக்­கின்­றது. அவர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தவே இந்த புதிய அமைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. 

எதிர்க்­க­ருத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தவே இந்த அமைப்பை உரு­வாக்­கு­மாறு கோரப்­ப­டு­கின்­றது.  இதில் எனது பங்­க­ளிப்பு பெரி­தாக இருக்­காது. 

கேள்வி: நீங்கள் கூறும் அந்த அமைப்பை தற்­போது உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­றீர்­களா? 

பதில்:    மக்கள் இதனை கேட்­கின்­றனர். எனவே தேவை­யான சூழலில் இந்த அமைப்பு உரு­வாகும். 

கேள்வி:  உங்கள் அர­சாங்­கத்தின் கீழி­லி­ருந்த சிறந்த இரா­ணுவத் தள­பதி தற்­போ­தைய பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சேகா நீங்கள் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­த­தாக குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­தி­ருக்­கின்றார். நீங்கள் புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தீர்­களா? 

பதில்: (சிரிக்­கிறார்) அதனை நான் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றேன். புலி­க­ளுக்கு நாம் பணம் வழங்கவில்லை. எங்­க­ளுக்கு அவர்­க­ளுடன் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை. 

புலிகள் இவ்­வாறு பணம் வாங்­கி­னார்கள் என்று கூறு­வது தமிழ் மக்­க­ளுக்கு செய்­கின்ற பாரிய அகௌ­ர­வ­மாக இருக்­கின்­றது. தமிழ் மக்கள் 1947 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஒரு கொள்கை அடிப்­ப­டை­யி­லான தீர்­மா­னத்தில் செயற்­பட்டு வந்­துள்­ளனர். முழு இலங்­கையும் ஜே.ஆர். ஜெய­வர்­த­ன­வுக்கு வாக்­க­ளித்­த­­போது கொப்­பே­க­டு­வ­வுக்கு வாக்­க­ளித்த மக்­களே வடக்­கி­லுள்­ளனர். அந்­த­வ­கையில் அவர்கள் தைரி­ய­மாக அர­சியல் தீர்­மானம் எடுக்கும் மக்கள்.  அர­சியல் ரீதியில் தேர்­தலை புறக்­க­ணிப்­பார்கள். வேறு­வ­கை­யான முடி­வு­களை எடுப்­பார்கள். அவை இந்த நாட்டின் அர­சி­யலில் இடம்­பெற்ற விட­யங்கள். மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒரு முறை தேர்­தலை புறக்­க­ணித்­தது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் மாவட்ட அபி­வி­ருத்தி சபை தேர்­தலை புறக்­க­ணித்­தது. முன்னாள் இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை கொலை செய்­வ­தற்கு புலிகள் எடுத்த தீர்­மானம் தவ­றா­னது எனக் கூறப்­ப­டு­வதைப் போன்று 2005 ஆம் ஆண்டு தேர்­தலில் வாக்­க­ளிக்­காமல் இருந்­தமை  அவர்­களின் தவ­றான முடி­வாக இருக்­கலாம்.  அன்று மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு சர்­வ­தேச தொடர்பு இல்­லை­யென்றும் யுத்தம் செய்யத் தெரி­யாது என்றும் புலிகள் நினைத்­தி­ருக்­கலாம். கோத்­த­பாய ராஜ­பக்ஷ என ஒரு சகோ­தரர் இருந்­தமை தெரி­யாமல் இருந்­தி­ருக்­கலாம். அதனால் அவ்­வாறு புறக்­க­ணித்­தி­ருக்­கலாம்.   எவ்­வா­றெ­னினும் மக்­களின் தீர்­மா­னத்தை அகௌ­ர­வப்­ப­டுத்­து­வது முறை­யல்ல. 

கேள்வி: இது தொடர்பில் நீங்கள் என்ன செய்யப் போகின்­றீர்கள்? 

பதில்:  அதி­க­மான விட­யங்­களை கூறிக் கொண்­டி­ருக்­கின்றார். நான் இந்த விட­யத்தை எனது சட்­டத்­த­ர­ணி­க­ளிடம் ஒப்­ப­டைத்­து­விட்டேன். 

கேள்வி: ஜன­வரி 8 ஆம் திகதி தேர்தல் முடி­வ­டைந்­த­வுடன் நீங்கள் ஏன் அமெ­ரிக்­கா­வுக்கு சென்­றீர்கள் ? 

பதில்: அது எனது தனிப்­பட்ட ஒரு முடிவு. எனது பாது­காப்­பினைப் பற்றி சிந்­தித்து மக்­களின் தீர்ப்­பிற்கு தலை­சாய்த்து நான் அன்று அவ்­வாறு பய­ண­மானேன். மக்கள் எம்மை வேண்­டா­மென்று கூறி­ய­தனால் வெற்றி பெற்­ற­வர்கள் சிறந்த முறையில் செயற்­பட இட­ம­ளித்­து­விட்டு நான் சென்றேன். இவ்­வாறு இதற்கு முன்னர் பல அர­சியல் தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருந்­தனர். எனது பிள்­ளைகள் மனைவி அனை­வரும் அமெ­ரிக்­கா­வில்தான் வாழ்­கின்­றனர். 

மஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­யுற்­றதும் அலரி மாளி­கை­யி­லி­ருந்து மெத­மு­ல­ன­வுக்கு சென்­றது போன்று நான் எனது குடும்­பத்­தா­ரிடம் சென்றேன். அதனைப் பலர் பல விதங்­களில் அர்த்­தப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அதில் ஏதும் குறை­பாடு இருந்­தி­ருந்தால் நான் கவ­லை­ய­டை­கின்றேன். 

கேள்வி: 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் நாட்டின் தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு உங்கள் அர­சாங்­கத்திற்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தது. ஆனால் அதனை நீங்கள் தவற விட்­டீர்­களே ? 

பதில்:இல்லை இது தவ­றான கருத்­தாகும்.  அர­சியல் ரீதியில் தேசியப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு தற்­போது தான் வர­லாற்று ரீதி­யான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. இன்று அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருக்­கின்ற தமிழ்த் தரப்பு அன்று எம்­முடன் இணைந்­தி­ருக்­க­வில்லை. அன்று நாம் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள் குடி­யேற்ற கடும் பாடு­பட்டோம். யாரும் எமக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை. புலம்­பெயர் மக்­களும் எத­னையும் செய்­ய­வில்லை. குழப்­பங்­க­ளையே ஏற்­ப­டுத்­தினர். மக்­களை மீள்­கு­டி­யேற்­றவே எங்­க­ளுக்கு இரண்­டரை வரு­டங்கள் தேவைப்­பட்­டன. அன்று அர­சியல் தீர்வைப் பற்றி பேசு­வதை விட மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கே காலம் தேவை­யாக இருந்­தது. அந்த இடத்­தி­லி­ருந்தே கூட்­ட­மைப்­பினர் எமக்­கெ­தி­ரா­கவே செயற்­பட்டு வந்­துள்­ளனர். பேச்­சு­வார்த்தை நடத்தக் கூட அவர்கள் இணங்­க­வில்லை. தற்­போது இந்த அர­சாங்­கத்­திற்கு வழங்கும் ஆத­ரவை கூட்­ட­மைப்பு அன்று எமக்கு வழங்­கி­யி­ருந்தால் நாமும் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்­வனைக் கண்­டி­ருப்போம். 

கேள்வி:இதனைப் பொறுப்­புடன் கூறு­கின்­றீர்­களா ? 

பதில்: பாரிய பொறுப்­புடன் கூறு­கின்றேன். நாங்கள் இதற்கு முயற்­சித்தோம். ஐ.நா.வில் தமிழ் மொழியில் பேசிய தலைவர் எமது மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஆவார். இவ்­வாறு தற்­போ­து­கூட யாரும்  இல்லை. இன்று வடக்கு மக்­க­ளுக்கு 700 ஏக்கர் காணி­களை மீள் கொடுக்­கின்­றனர். நாங்கள் 7000 ஏக்கர் காணி­களை மீள வழங்­கினோம் என்­பதை பொறுப்­புடன் கூறு­கின்றேன். ஆனால் தவ­றான கண்­னோட்­டத்தை வெளிக்­காட்­டினர். எனவே அன்று அவர்கள் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்­டி­ருந்தால் இன்று இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்­டி­ருக்கும். எமது பக்­கத்­திலும் குறை­பா­டுகள் இருந்­தன. நாம் காணி­களை கொடுத்­து­விட்டு வந்த பின்னர் பாது­காப்பு தரப்­பினர் மீண்டும் அவற்றை பெற்றுக் கொண்ட சந்­தர்ப்­பங்­களிலும் இருந்­தன. 

கேள்வி: உங்­க­ளது அர­சாங் கம் முஸ்லிம் மக்கள் விட­யத்­திலும்  முறை­யற்ற விதத்தில் நடந்­து­கொண்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன.

உங்கள் தரப்பு தோல்­விக்கு  முஸ் லிம் மக்கள் மீதான கெடு­பி­டி­களே காரணம் என்றும் கூறப்­ப­டு­கின்­றதே? 

பதில்: முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­கவே நாங்கள் முயற்­சித்தோம். ஆனால் நாங்கள் தீர்த்த பிரச்­சி­னை­களும்  தற்­போது மீண்டும்  குழம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  நேர்­மை­யான முறையில்   தமது மக்­க­ளுக்­காக செயற்­பட்டு வந்தார்.  ஆனால்  அப்­போ­தைய  மன்னார் ஆயர்  அதற்கு  இடை­யூ­றாக இருந்து வந்தார். பல கவ­லை­யான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன அந்த மக்கள் அதி­க­ளவில் ஐ.தே.க  ஆட்சிக் காலத்­தில கஷ்­டப்­பட்­டனர். புலி­க­ளி­னாலும் கஷ்­டங்­களை எதிர்­கொண்­டனர். முஸ்லிம் நாடு­க­ளுடன் மஹிந்த ராஜ­ப­க் ஷ­ வுக்கு சிறந்த தொடர்­புகள் காணப்­பட்­டன. இந்த நாட்­டி­லுள்ள முஸ்லிம் நாடு­களின் தூது­வர்கள் மஹிந்த ராஜபக் ­ஷ­வுக்கு ஆத­ரவு வழங்­கினர். எமது காலத்தில் பிர­தான முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் எம்­முடன் இருந்­தனர். ஆனால் சில அமைப்­புக்கள் உரு­வா­கி­யு­துடன்  முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­வதை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால் அந்த அமைப்­புக்­களின் ஒரு­சில செயற்­பா­டு­களை நாங்கள் எதிர்­கின் றோம். மஹிந்த ராஜ­ப­க் ஷவும் அவற்றை எதிர்த்தார். அந்த அமைப்­புக்கள் செய்த சில நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் மக்கள் மத்­தியில் பாரிய பிரச்­சி­னை­க­ளாக உரு­வெ­டுத்­தன. அவற்­றிற்கு ஊட­கங்­களும் தேவை­யற்ற பிர­சித்­தங்­களை வழங்­கின. 

கேள்வி: அப்­போ­தைய அர­சாங்கம் ஒரு சில இடங்­களில் சில நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கலாம் அல்­லவா? 

பதில்: இந்த விட­யத்தில் பாரிய குறை­பா­டுகள் இருந்­தன என்­பதை ஏற்றுக் கொள்­கின்றேன். முஸ்லிம் மக்கள் சந்­தே­கப்­ப­டு­கின்ற வகையில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. கிரிஸ் பேய் சம்­ப­வங்­களும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வை­யென காட்­டப்­பட்­டன. நாம் சற்று அக்­க­றை­யுடன் செயற்­பட்­டி­ருக்­கலாம் என ஏற்றுக் கொள்­கின்றேன். இன்று அர­சாங்­கத்­தி­லி­ருக்­கின்ற சிலர் அன்று எமது பக்­கத்­தி­லி­ருந்து கொண்டு சில நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை. மஹிந்த ராஜ­பக் ஷ 290 பள்­ளி­வா­சல்­களை மீண்டும் திறந்து வைத்தார். பல பள்­ளி­வா­சல்­களை மறு­சீ­ர­மைப்பு செய்தார். கூர­கல பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை நிவர்த்தி செய்ய நாம் முயற்­சித்தோம். ஆனால் அவ்­வா­றான சம்­பங்­களில் முஸ்லிம் மக்கள் மன­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்­டனர். ஆனால் முஸ்லிம் மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டார். எனினும் தவ­றான பிர­சா­ரங்கள் கார­ண­மாக நிலைமை மாற்­ற­ம­டைந்­தது. 

கேள்வி: தற்­போது புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. அதற்­காக பார­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்வு எவ்­வாறு அமைய வேண்­டு­மென நீங்கள் கரு­து­கி­றீர்கள் ?

பதில்: முதலில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றி­யுள்­ள­மையே சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பு படி அவ்­வாறு செய்ய முடி­யாது. புதிய அர­சி­ய­ல­மைப்­பபை உரு­வாக்­கு­வ­தற்கு 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் ஒரு முறைமை காணப்­ப­டு­கின்­றது. அதனைப் பின்­பற்­றா­ம­லேயே தற்­போது நட­வ­டிக்கை எடுக்­கின்­றனர். தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலமோ இரண்டில் ஒன்று பெரும்­பான்மை பலமோ இல்லை. ஐ.தே.க.வுக்கு 113 ஆச­னங்கள் கூட கிடைக் ­க­வில்லை. எனவே இவர்­க­ளுக்கு புதிய அர­சி­ய­ 

ல­மைப்பை உரு­வாக்க மக்கள் வாக்களிக்க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முறை­மைக்கு அப்­பாற்­பட்டே இவர்கள் செயற்­ப­டு­கின்­றனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெ ளிப்­ப­டுத்­த­வில்லை. இது தவ­றான முன்­னு­தா­ர­ண­மாகும். அர­சியல் தீர்­வினை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தென்றால் அது நிலை­யா­ன­தாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மேற் ­கொள்ளும் முறையில் தீர்வை முன்­வைத்தால் அது நிலை­யா­ன­தாக இருக்­காது. எனவே ஏற்றுக் கொள்­ளப்­பட்ட முறை­மைக்கு அமை­வா­கவே இதனை செயற்­ப­டுத்த வேண்டும்.

கேள்வி: ஆனால் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வினை காண்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்­கின்­றீர்­களா ? 

பதில்: நிச்­ச­ய­மாக ஆம். சிறந்த சந்­தர்ப்பம் தற்­போ­துதான் கிடைத்­துள்­ளது. அதனை செய்து முடிக்க வேண்டும். இதனை தவற விட்டால் அது பெரி­யதொர் அநி­யா­ய­மாகும். நாங்கள் அனை­வரும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவோம். ஆனால் அதனை சரி­யாக செய்ய வேண்டும்.  உண்­மைக்­கு மாறாக செயற்­பட வேண்டாம். உங்­களை நம்­பி­ய­வர்­க­ளுக்கு பொய் செய்ய வேண்டாம். தமிழ் மக்கள் உங்கள் மீது நம்­பிக்கை வைத்­ 

துள்­ளனர். அதனை உண்­மை­யான முறையில் நிறை­வேற்­றுங்கள். அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க சரி­யான முறையில் ஏன் செயற்­ப­டாமல் இருக்­கின்­றீர்கள் ? தமிழ் மக்­களை இன்று ஒரு­சிலர் காட்டிக் கொடுத்­து­விட்­டனர். இவ்­வா­றான சந்­தர்ப்பம் இதற்கு முன்னர் எமக்கு கிடைக்­க­வில்லை. ஆனால் இவர்கள் உண்­மை­யாக செயற்­பட வேண்டும். மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கின் 

­றனர். நீண்­ட­கால அர­சி­யல்­தீர்­வினை வழங் கும் எண்ணம் இவர்­க­ளுக்­கில்லை. அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­யி­னையும் இவர்கள் மாற்ற மாட்­டார்கள். அப்­ப­டியே அர­சியல் தீர்­வினை கொடுத்­தாலும் அது உறு­தி­யா­ன­தாக இருக்­காது. 

கேள்வி : நீங்கள் ஏன் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை. 

பதில்:நான் அதனை விரும்­ப­வில்லை. எதிர்­கா­லத்­திலும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எண்­ண­மில்லை. 

கேள்வி: உங்­க­ளது ஆட்­சியின் இறு­திக்­கா­லத்தில் இந்­தி­யா­வு­டனும், அமெ­ரிக்­கா­வு­டனும் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டதா? 

பதில்:சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. அது எமது பக்க குறை­பா­டு­க­ளா­கவும் இருக்­கலாம். 

கேள்வி: 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 அம் திகதி பிரபாகரன் உயிருடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா? 

பதில்: அது தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது. 

கேள்வி:புலிகள் சரணடைய வருவ தாக சர்வதேச மட்டத்தில் உங்களூடாக யாராவது தகவல் அனுப்ப முயற்சித்தனரா ?

பதில்: சில விடயங்கள் அவ்வாறு இடம்பெற்றதாக தகவல்கள் உள்ளன. அவை சிக்கலுக்குரிய கேள்விகளாக இருப்பதனால் நான் பதிலளிப்பதிலிருந்து விலகுகின்றேன்.

கேள்வி: இலங்கை அரசாங் கம் உள்ளக விசாரணையினை மேற்கொள்ள வுள்ளதாக கூறுகின்றது. இது தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. உங்களின் பார்வை எவ்வாறு உள்ளது ?

பதில்:இதில் எமது அரசியலமைப்புக்குட் பட்டு பாதிக்கப்பட்ட நம்பிக்கை கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே எனது கருத்தாகும். எமது அரசியலமைப்பினை மீறி வெ ளிநாட்டு நீதிபதிகள் பங்கெடுப்பது முறைமையல்ல. அது இறைமையினை பாதிக்கும் .ஆனால் விசாரணை முறைமை நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும். இது உண்மையில் சிக்கலுக்குரிய விடயம்தான். அரசாங்கம் இதில் சரியான தீர்மானம் எடுத்து செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பதி அடைவதே இங்கு முக்கியமானதாகும். எமது நீதித்துறையில் வெ ளிநாட்டுத் தரப்பினர் தலையிடுவது சரியல்ல. ஆனால் தொழில்நுட்ப உதவிகளைப் பெறலாம். எமது இறைமை பாதுகாக்கப்பட வேண்டும். இது முழு நாட்டினதும் பிரச்சினையாகும். இதில் சர்வதேசத்தை திருப்திப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திபடுத்த வேண்டும். 

கேள்வி: 2014 ஆம் ஆண்டு  நவம்பர் 21 ஆம் திகதி வரை பொது வேட்பாளர் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? 

பதில்:எமக்கு வதந்திகள் போன்ற  தகவல் கிடைத்தது. ஆனால் நாம் நம்பவில்லை. சிலர் வந்து கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04