MCB  வங்கியின் மெருகேற்றம் செய்யப்பட்ட காலி கிளை புதிய முகவரியில் திறப்பு

Published By: R. Kalaichelvan

31 Oct, 2018 | 11:37 AM
image

மெருகேற்றம் செய்யப்பட்ட MCB காலி கிளையை புதிய முகவரியில் நிமல் கீகனகே, ட்ரஸ்ட் ஜெம்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மொஹமட் நிஸாம்,தில்ஷார எக்ஸ்போர்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் துஷாந்த குமார ஆகியோர் திறந்து வைத்தனர்.தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் MCB வங்கி தனது காலி கிளையை மெருகேற்றம் செய்து புதிய முகவரியில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. 

2013ஆம் ஆண்டு இந்த கிளை முதன் முதலில் திறந்து வைக்கப்பட்டதுடன், MCB இலங்கை செயற்பாடுகளில் வெளிநகரில் திறந்து வைக்கப்பட்ட இரண்டாவது கிளையாக அமைந்துள்ளது.

2018 ஒக்டோபர் 22ஆம் திகதி இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றதுடன்,இந்நிகழ்வில் MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி மற்றும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கோமரன் குரூப் ஒஃவ் ஹோட்டல்ஸ் தலைமை அதிகாரி நிமல் கீகனகே,ட்ரஸ்ட் ஜெம்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மொஹமட் நிஸாம், தில்ஷார எக்ஸ்போர்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் துஷாந்த குமார மற்றும் இதர முன்னணி வியாபாரிகள்,வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right