சிங்கள அரசாங்கத்தை அமைப்பதற்கு நான் விரும்பவில்லை ; த.மு.கூட்டணியின் உதவியை நாடும் மஹிந்த

Published By: Vishnu

29 Oct, 2018 | 09:02 AM
image

புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

 

தமிழ்  முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மஹிந்த, புதிய அரசாங் கத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிங்கள அரசாங்கத்தை அமைப்பதற்கு நான் விரும்பவில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முன்னணியின் பிரதி தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரத்துடனும் புதிய பிரதமர் தொலைபேசியில் கலந்துரையாடி யுள்ளார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கு மாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டு  தமது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாகவும் ஆதரவுக்கான கோரிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அதியுயர்பீடக் கூட்டம் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தற்போதைய அரசியல் நிலைவரம்தொடர்பில் மனோ கணேசன் விளக்கிக்கூறியுள் ளதுடன் எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக் கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35