தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : தொழில் அமைச்சுக்கு உத்தரவிட்டார் பிரதமர்

Published By: Vishnu

26 Oct, 2018 | 03:38 PM
image

(மனோ சித்ரா)

கூட்டு ஒப்பந்தம் முடியும் வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 600 ரூபாவையும் இடைக்கால கொடுப்பனவாக 100 ரூபாவையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொழில் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பிரதமரின் இந்த முடிவை தாம் ஏற்கப்போவதில்லை என தொழிற்சங்க உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க, முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தொழிசங்க உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் முத்துசிவலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பான நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் இன்று அறிவித்த தீர்மானம் தொடர்பில் தொழிற்சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47