விசர்நாய் கடியால் பாடசாலை மாணவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எம்.ஏ.முகமட் பாஸி தெரிவித்தார்.
திருகோணமலை மாகாணப் பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2017 ஆம் ஆண்டு முதல் விசேட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய விசர்நாய் கடி தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற் கொள்வதற்கான பணியை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விசர்நாய்கடி மற்றும் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
எனவே இம்மாதம் 29 முதல் நவம்பர் 02 ஆம் திகதி வரை 46 அரச மிருக வைத்திய நிலையங்களிலும் இந்த தடுப்பூசி இடுதல் மற்றும் கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் 29 ஆம் திகதி திருகோணமலை உற் துறைமுக வீதியில் உள்ள மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி ஒன்று திருகோணமலை மணிக்கூண்டு கோபுரம் வரை செல்லவுள்ள எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM