பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான 1,000 ரூபாவை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கவனயீர்ப்பில், நிறுவகத்திலுள்ள சகல மாணவர்களும் பங்கேற்றனர்.
இடுப்புடைய உழைப்போருக்கு உருப்படியாய் ஊதியம் கொடு, உழைப்பவன் தோட்டத்தொழிலாளி, பிழைப்பது முதலாளியா, தேனீரை மட்டும் குடி சம்பளத்தை வழங்காதே, போராட்டம் என்பது எமக்கானது மட்டுமல்ல எமது தலைமுறையின் எதிர்கால வாழ்கைக்காக, உன் வயிற்றை நிரப்ப தொழிலாளி வயிற்றில் அடிக்காதே, சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களே தொழிலாளியின் சம்பளத்தை உயர்த்தப் போராடு போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம், மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM