தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

23 Oct, 2018 | 10:17 PM
image

இந்தியா, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டின மீனவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்திரவிட்டுள்ளார்.

நேற்று காலை  தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களை நெடுந்தீவிற்கு 30 நாட்டிக்கல் தூரத்தில் வைத்து  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக  இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

 இதனையடுத்து குறித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்து ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன்  முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த 5 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்