கைவிடப்பட்டது புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை நிர்மாணப் பணிகள்

Published By: Vishnu

23 Oct, 2018 | 02:56 PM
image

மட்டக்களப்பு, புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகளை கைவிடப்போவதாக ரொமன்சியா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான முகமட் ஜெசிம் தெரிவித்துள்ளார்.

மேலும் இனமத ரீதியிலான புரிதலில் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது. இரு இனங்களிலும் இன நல்லுறவினை வலுப்படுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் செங்கலடியில் உள்ள செல்லம் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் பிரதிநிதிகள், சர்வமத அமைப்புக்கள், சிவில் ஒன்றிய நிறுவனங்கள் மற்றும் மட்டு.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட கணபதிப்பிள்ளை மோகன், இத் தொழிற்சாலையின் பணிகள் கைவிடப்பட்டது பிரதேச மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.

இக் குடிநீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 மாதகாலமாக பிரதேச மக்கள்  சமூக நல அமைப்புக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26