தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்கு எமது சிறுவர்களை பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் அடங்கிய ஊர்வலம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
பத்தனை சந்தியிலிருந்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி வளாகம் வரை சென்ற குறித்த ஊர்வலத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை மாணவர்கள் 100 பேர் உள்ளடங்கிய ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாகிகள், பீடாதிபதி, உப பீடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியின் மாணவர்கள், பத்தனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “சிறுவர்களை சமூகத்தின் நற்பிரஜையாக உருவாக்குவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், ஓவியமான மழலைகளின் கனவுகளுக்கு உயிர் கொடுப்போம், நல்ல விருட்சங்களை உருவாக்க சிறுவர் எண்ணங்களில் விதை விதைப்போம் போன்ற பதாதைகளையும் ஏந்திய வண்ணம் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சிறுவர் உரிமை தொடர்பில் கை அச்சு இடும் நிகழ்வுடன், வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும், பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு, கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM