ஆடுகளை ஆட்டை போட்ட இருவர் வசமாக மாட்டினர்

Published By: Priyatharshan

17 Mar, 2016 | 03:06 PM
image

ஆடுகளை மிகவும் சூட்சுமமாக திருடிய இருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமமான மஜ்மா கிராமத்தில் ஆடுகளை திருடிச்சென்ற குருணாகல் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்த நபர்களிடமிருந்து திருடிய 28 ஆடுகளையும் திருடுவதற்காக பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று காலை மஜ்மா கிராமத்தில் உள்ள தனது ஆட்டு பண்ணையில் இருந்து ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக ஆட்டு உரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவின் ஆலோசனையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சர் விதானகேயின் வழிகாட்டலில் செயற்பட்ட வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் மற்றும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஹயானகுமார அடங்கலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆடுகளை திருடி குருணாகல் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவேளை சந்தேக நபர்கள் இருவரை கைது பொலிஸார் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து  28 ஆடுகளையும் அதற்கு பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

ஆடுகளை திருடிய சந்தேக நபர்களுக்கு இப்பகுதியில் வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11