இராணுவ அதிகாரியை ஐநா திருப்பி அனுப்புவது குறித்து கோத்தபாய தெரிவிப்பது என்ன?

Published By: Rajeeban

21 Oct, 2018 | 08:03 PM
image

யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில்கூட இலங்கையால் ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதென்றால் ஏன் இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பபடுவதை  அரசாங்கத்தினால் தடுக்க முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இது இடம்பெற்றால் இந்த அதிகாரி வேண்டாமென்றால் அனைத்து படையினரையும் திருப்பி அனுப்புங்கள் என ஐநாவிற்கு தெரிவித்திருப்போம் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

எனினும் இன்று ஜனாதிபதியோ பிரதமரோ எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவர் ஜனாதிபதிக்கு எதிராக கொலை சதி முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க முடியாத பலவீனமான நிலையில் தற்போதைய அரசாங்கம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50