வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் இன்று வீடு கையளிக்கப்பட்டது.
முன்னர் வசித்து வந்த வீடு மண்ணினால் கட்டப்பட்ட மழைக்கு இடிந்து விழும் நிலையில் காணப்பட்டமையினால் அம்மா அறக்கட்டளை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஜேர்மன் மகளீர் அமைப்பினரின் ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா நிதியில் இவ் தற்காலிக வீடு அமைக்கப்பட்டது.
குறித்த வீட்டினை பயனாளிக்கு கையளிக்கும் இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து. நடராஜசிங்கம் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் , அம்மா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM