தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தோம்.
இரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தார். 40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன் என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை அச்சுறுத்தல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM