“ரோ“ மீது சிறிசேன குற்றச்சாட்டு வதந்தியை பரப்பியது யார்- இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்

Published By: Rajeeban

20 Oct, 2018 | 12:18 PM
image

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால   சிறிசேன  தன்னை கொல்வதற்கான சதி முயற்சியில் ரோ ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்ற வதந்தி பரவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காரணமாகயிருக்கலாம் என இந்தியாவின்  எகனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி  எகனமிக் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளே காரணமாகயிருக்கலாம் என எகனமிக் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கும்  இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களிற்கும் இடையில் உள்ள நல்லுறவை குழப்பும் முயற்சியாகவே இது இடம்பெற்றிருக்கலாம் எனவும்  எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இரு அரசாங்கங்களிற்கும் இடையிலான உறவு எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றது என்பதே மகிந்த ராஜபக்சவின் மீள் வருகையை சாத்தியமாக்கும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி  சிறிசேன- ரோ குற்றச்சாட்டு குறித்த வதந்தியை பரப்பியிருக்கலாம் என இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்தியாவிற்கு இடையில் நல்லுறவை விரும்பாத சக்திகளிடமிருந்தே இந்த வதந்தி உருவாகியிருக்கலாம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பிரதமர் இ;ந்திய பிரதமரையும்  பாதுகாப்பு வட்டாரங்களை சேர்ந்தவர்களையும் சந்திக்கும்போது இந்த விடயம் பிரதானமாக ஆராயப்படும் எனவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு இலங்கை பிரதமர் விஜயம் மேற்கொள்ளும்போது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என முதலில் திட்டமிடப்பட்டிருக்கவில்லை எனினும் ரோ குறித்த குற்றச்சாட்டுகளிற்கு பின்னர் அவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களை சந்திப்பார் என  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எகனமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40