துறைநீலாவணையிலிருந்து பெரியநீலாவணைக்கு செல்லும் குமரப்போடியார் குளக்கட்டுவீதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனைகட்டுப்படுத்துவதற்குபொலிஸார் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டுமெனபொதுமக்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
குறித்த பாதையானது துறைநீலாவணைக் கிராமத்திற்கு செல்லக் கூடிய இலகுவானது இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான அரச உத்தியோகத்தர்கள் மாணவர்கள் இபொதுமக்கள் தமது பயணத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
சனநடமாட்டம் குறைவான நண்பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் இனந்தெரியாத நபர்கள் நடமாடுவது மாத்திரமல்லாது தனிமையில் குறித்த வீதியில் பயணிக்கும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்து செல்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மையில் இரு பெண்கள் குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க ஆபரணங்களை திருட முயற்சியினை மேற்கொண்ட போது குறித்த பெண்களின் துணிகரமான செயற்பாடு காரணமாக திருடர்களின் முயற்சிகைவிடப்பட்டிருந்தன.
கடந்த காலங்களில் குறித்த வீதியில் பலரது தங்கஆபரணங்கள் திருடர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளநிலையில் பொலிஸாரின் தலையீடு காரணமாக குறித்த சம்பவம் குறைந்திருந்தது.
ஆனால் தற்போது திருடர்களின் கைவரிசைஆரம்பித்துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவது மாத்திரமல்லாது இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM