மன்னார் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு கல்வி வலய அதிகாரிகள் இணைந்து மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற இருக்கும் திருமதி சுகந்தி செபஸ்ரியனுக்காக ஏற்பாடு செய்திருந்த மணிவிழா நிகழ்வானது நேற்று மன்னார் நகரமண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வு மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகி தேசிய பாடசாலைகளின் பான்ட் இசையுடன் விருந்தினர்களுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக இன்னியம் முழங்க ஊர்வலம் மன்னார் நகர மண்டபத்தை வந்தடைந்தது.
திருமதி சுகந்தி செபஸ்ரியன்னின் கல்விப்பணியும் ஆளுமைப்பண்பும் திறமையன முகாமைத்துவ செயற்பாடும் சேவை நலனும் கவிதைகளாகவும் பாடல்களாக ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் வாழ்த்துப்பாக்களாக இசைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் சிறப்பம்சமாக திருமதி.சுகந்தி செபஸ்ரியன்னின் 36 வருட கால கல்வி சேவையினை நினைவு கூறும் வகையில் மணிவிழா நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
திருமதி.சுகந்தி செபஸ்ரியன் 36 வருட கல்விபணியில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக, வலயக்கல்விப்பணிப்பாளராக, மடு ,மன்னார் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் பிரதி செயலாளராகவும் யுத்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் சேவையாற்றியாற்றியுள்ளார்.
குறித்த நிகழ்வில் வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , ஏனைய மாவட்ட கல்விப்பணிப்பாளர்கள் , மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அதிபர்கள் , ஆசிரியர்கள் சர்வ மதத்தலைவர்கள் அரச அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM