நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்து சேவையாற்றிய இராணுவத்தினருக்காக நாடு என்ற ரீதியில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப்பட்ட இராணுவத்தினருக்கான நலன்புரி செயற்திட்டங்களை கையளிக்கும் “சத்விரு அபிமன்” இராணுவ நலன்புரி விழா ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றது.
முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இராணுவத்தினருக்காக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 800 வீடுகளை பூரணமாக்கி கொடுத்தல், இராணுவத்தினரின் பிள்ளைகளுக்காக 279 “விரு சிசு பிரதீப” புலமைப்பரிசில்கள், குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத இராணுவத்தினருக்கு 84 பகுதியளவு காணித் துண்டுகளை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றன.
உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு வழங்கப்படும் 100 வீடுகளை நிர்மாணிக்க “நமக்காக நாம்” நிதியத்தின் நிதியுதவியின் கீழ் 15 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரின் தொழிற் பங்களிப்பு மற்றும் உபகரணங்கள் உள்ளடங்களாக ச்செயற்திட்டத்தின் மொத்த பெறுமதி 30 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும்.
சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற 500 இராணுவத்தினருக்கு அவர்களது வீட்டு நிர்மாணப் பணிகளை நிறைவடையச் செய்வதற்கு “நமக்காக நாம்” நிதியத்தின் ஊடாக 35 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளது. உயிர்நீத்த மற்றும் அங்கவீனமுற்ற 300 இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை நிறைவு செய்ய தேசிய பாதுகாப்பு நிதியினூடாக 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 279 இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் “விரு சிசு பிரதீப” புலமைப்பரிசில்களுக்காக தேசிய பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக 69 இலட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. அரச காணிகள் வழங்கும் செயற்திட்டத்தினூடாக கல்னேவ, ரஸ்நாயக்கபுர மற்றும் கொட்டவெஹெர பிரதேச செயலகங்களில் குடியிருப்பு வசதிகளற்ற இராணுவத்தினருக்காக 84 காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு சிலருக்கு ஜனாதிபதியால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன உள்ளிட்ட முப்படை தளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM