ஒன்பது மணி நேர விசாரணைகளின் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதித் செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணைகளுக்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவா இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜரானார்.
இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவருக்கு மேற்க்ணட அறிவிப்பினை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.