வான்வெளி பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அறிவை இலங்கை மற்றும் வலய நாடுகளுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் இடம்பெறும் கொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் நேற்று முற்பகல் அத்திடிய ஈகல் லேக் சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான “வான்வெளி மூலோபாயம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு இலங்கை விமானப் படையினால் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, தீவொன்றின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சாதகமாக அமையும் வான்வெளி உபாயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடுவதற்காக தேசிய மற்றும் சர்வதேச இராணுவம் மற்றும் அது தொடர்பில் அக்கறை கொண்டுள்ள ஏனைய கல்விமான்களை ஒன்று திரட்டும் பொது தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
பொது கருப்பொருள் ஒன்றின் கீழ் அறிவு, அனுபவம் மற்றும் சிறப்புத் தேர்ச்சிகளை பரிமாறிக்கொள்வதற்கு உலக இராணுவத் தளபதிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், சர்வதேச புலனாய்வு துறை உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் இங்கு ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
கொழும்பு வான்வெளி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பு அத்திடிய ஈகல் லேக் சைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜேகுனவர்தன ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் பலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM