பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களை பாராட்டும் “ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதீப - 2018“ விருது விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் பத்தரமுல்ல வோர்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலக்கியம், கலை மற்றும் தொடர்பாடல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பழைய மாணவர்கள் இதன்போது பாராட்டப்பட்டனர். பேராசிரியர் சங்கைக்குரிய பாதேகம ஞானிஸ்ஸர நாயக்க தேரர் உள்ளிட்ட 40 பழைய மாணவர்கள் ஜனாதிபதியிடமிருந்து கௌரவ விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
மூன்றாவது தடவையாக இடம்பெற்ற இந்த விருது விழா ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் டபிள்யு.கே.எச்.வேகபிடிய, தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் இத்தமல்கொட, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM