நல்லாட்சியைத் தோற்றுவித்ததிலிருந்து அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே உள்ளன. ஆனால் அதன் பிரதிபலன்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கு வெகுவிரைவில் கிடைக்கும். மக்களை நாங்கள் மறந்துவிடவில்லையென டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் தொடர்பாடல் வலுவாக்கல் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டார்.
மின் உற்பத்திச் செயற்பாடுகளில் தமது நாசகாரச் செயற்பாடுகளை காண்பித்து குழப்ப முற்படும் மஹிந்தவின் அவதாரங்கள் யார் என்பதையும் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவது தொடர்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை உருவாக்கிய பின்னர் அபிவிருத்திச் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக ஒரு எண்ணத்தை மக்களிடையே உருவாக்கி, அதனூடாகத் தம்மை வலுப்படுத்திக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் முயற்சிக்கின்றனர்.
ஆனால் மஹிந்தவின் அவதாரங்கள் அவரை வைத்து மீண்டெழ எத்தனை முறை முயற்சித்தாலும் அது அவர்களால் முடியாது என்பதே உண்மையான நிலைப்பாடு. அது தெரிந்திருந்தும் நல்லாட்சி அரசாங்கத்தில் குறைபாடுகள் உள்ளதென சுட்டிக்காட்டி மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முற்படுகின்றனர்.
இதற்காக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். இவர்கள் போல் ஆர்ப்பாட்டங்கள் செய்வது எமக்கு புதிய விடயமல்ல. ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தைக் காட்டுவதற்காகவே ஆளும் கட்சியாக இருந்தும் வீதியிலிறங்கி எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
ராஜபக் ஷக்களின் அவதாரங்கள் அரசாங்க செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வது போன்று மின் உற்பத்தி நிலையங்களிலும் தமது நாசகார வேலைகளை அரங்கேற்றி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்த முற்படுகின்றனர். இந்தச் செயற்பாடுகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறான செயற்பாடுகளினாலும் நாட்டை கடந்த அரசாங்கம் கடன் குகைக்குள் தள்ளிவிட்டுள்ளதாலும் நல்லாட்சி அரசாங்கம் துரித கதியில் பயணிப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனினும் சிக்கல்களை களைந்து விரைவில் நாட்டை வளமான அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவோம்.
நாம் கூறியது போன்று விரைவில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவோம். அதனால் நாம் எமது மக்களை கவனிக்கவில்லையென கவலை கொள்ள வேண்டாம். மந்த கதியில் பயணித்தாலும் வெகுவிரைவில் நல்லாட்சியை உருவாக்கிய மக்களுக்கான பிரதிபலன்களை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM