வவுனியாவில் சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10 மணியளவில் கஞ்சா வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சின்னக்குளம் நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது கிணற்றின் அருகே இருந்து ரி - 56 ரக துப்பாக்கி ரவைகள் 22 வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் 52 வயதான மரியம்பிள்ளை ஜேசுதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் குறிப்பிடுகையில் தான் மீன் பிடிக்க குளத்திற்கு சென்ற போது குளக்கரையில் பொதி செய்யப்பட்ட நிலையில் ரவைகள் காணப்பட்டதாகவும் அதனை தான் எடுத்து வந்து வீட்டு கிணற்றருகே வைத்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM