தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் தினமான 05.ஆம் திகதி தமிழ்ப்பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இந்து மக்கள் வெகு விசேடமாக கொண்டாடும் சிறப்புப் பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். இப் பண்டிகை அடுத்த மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று வருவதனால் அதற்கு முன் தினமான 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டியது அவசியமாகும்.
தீபாவளிப்பண்டிகைக்கு முதல் தினம் இரவு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் நிகழ்வுகள் செய்யப்படும். ஆகையினால் தமிழ் மாணவர்களினால் பெரும்;பாலானோர் தீபாவளிப் பண்டிகைக்கு முந்தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதில் பெரும் தயக்கம் காட்டி வருவது வழமை.
அத்துடன் தமிழ்ப் பாடசலைகளின் அதிபர், ஆசிரியர்களுக்கும், இதே நிலை இருந்து வருகின்றது. ஆகவே தீபாவளித் தினத்திற்கு முன்தினமான 5 ஆம் திகதி விடுமுறை வழங்கி அன்றைய விடுமுறை தினத்தினை பிறிதொரு சனிக்கிழமையில் பாடசாலைகளை இயங்க வைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM