(எம்.எம்.மின்ஹாஜ்)
நாடு முழுவதும் எற்பட்டிருந்த மின் துண்டிப்பு நாசகரமான செயல் என்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் உரிய நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்துண்டிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கேசரிக்கு அளித்த விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் குறைப்பாடுகளை தீர்ப்பதற்கு எமக்கு காலஅவகாசம் தேவைப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் ஏற்பட்டிருந்த மின் துண்டிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை சாதாரண விடயமாக எடுக்க முடியாது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்திருந்தார்.
எனவே இது குறித்து மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் எற்பட்டிருந்த மின் துண்டிப்பு நாசகரமான செயல் என்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் உள்ளன.
எனினும் விசாரணைகளின் பின்னர் இதன் உண்மை தன்மை எமக்கு தெரியவரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM