பொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

Published By: Digital Desk 4

17 Oct, 2018 | 03:52 PM
image

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட காணிகளில் 78 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மோதல் நிலவிய காலப் பகுதியில் முப்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட தனியார் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு விடுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன் கீழ்  இலங்கை கடற்படை பொறுப்பிலிருந்த மன்னார், முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள 23 ஏக்கரும் முல்லைத்தீவு. முல்லி வாய்க்காலில் அமைந்துள்ள 53 ஏக்கர் நிலப்பரப்பும்  இலங்கை இராணுவத்தின் 224 ஆவது படைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ள திருகோணமலை தோப்பூரில் 3 ஏக்கர் காணியையும் ஆரம்ப உரிமையாளரிடம் விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேபோன்று இந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தப்படவுள்ள பொதுமக்களுக்கு தமது  வாழ்வாதாரத்தை  நிலையான வகையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று குளங்களை சீர்செய்து  அந்தப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து அவற்றை ஆரம்ப உரிமையாளரிடம் கையளிக்கப்பட வேண்டும். 

இதற்கமைவாக தற்பொழுது முப்படையினரால் பயன்படுத்தப்படும் காணியை விடுவிக்கக் கூடிய வகையில் இவற்றை புனரமைப்பதற்கும் அந்தப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் தேவையான  நிதி வழங்குவதற்காகவும்  மீள் குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துக் கலாசார அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படுவதற்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46