எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதர ன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
வடமாகாண சபையின் பதவிக்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமது கொள்கையுடன் இணங்கி செல்கின்ற பலர் தம்முடன் இணையவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் நலன் விரும்பும் அரசியல் களம் ஒன்று அழிந்து செல்கின்ற காரணத்தினால் ஜனநாயக ரீதியாக தாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்களின் நம்பிக்கையை வென்ற அரசியல் தளம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் விரைவில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியின் யாப்பினை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் புதிய கட்சியை உருவாக்கும் கருத்துக்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM