புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் அனந்தி சசிதரன் 

Published By: R. Kalaichelvan

17 Oct, 2018 | 11:15 AM
image

எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர்  அனந்தி சசிதர ன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அவர் அழைப்பும் விடுத்துள்ளார். 

வடமாகாண சபையின் பதவிக்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில்  வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து அறிவிப்பு விடுத்துள்ளார்.  

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமது கொள்கையுடன் இணங்கி செல்கின்ற பலர் தம்முடன் இணையவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன் விரும்பும் அரசியல் களம் ஒன்று அழிந்து செல்கின்ற காரணத்தினால் ஜனநாயக ரீதியாக தாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்களின் நம்பிக்கையை வென்ற அரசியல் தளம் ஒன்றினை  உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் விரைவில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  அனந்தி சசிதரன்  தமிழரசு கட்சியின்  யாப்பினை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் புதிய கட்சியை உருவாக்கும் கருத்துக்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37