எனது நண்பனை நானே கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளினேன் : 13 வயது சிறுவன் தெரிவிப்பு

23 Nov, 2015 | 05:42 PM
image

எம்பிலிப்பிட்டிய - பனாமுர பகுதியில் கடந்த வாரம் 13 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் நண்பனான 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

குறித்த கொலை இடம்பெற்ற தினமான கடந்த புதன்கிழமை பாடசாலையில் தவணை பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்தமையினால் மாணவர்களுக்கு வழமையான நேரத்தை விட முன்னதாகவே பாடசாலை முடிவடைந்தது.

இதன் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுவனும் அவனது வகுப்பிலுள்ள சக மாணவனான நண்பனும் கிளி பிடித்து விளையாடுவதற்காக பாடசாலைக்கு அண்மையிலுள்ள பிரதேசத்திற்கு சென்று கிளி பிடித்து விளையாடினர்.

அதனை தொடர்ந்து  இருவரும் கிளி ஒன்றை பிடித்து அதற்காக சண்டைபோட்டுள்ளனர்.இதன் போது கொலை செய்யப்பட்ட மாணவனை அவனுடன் சென்ற சக மாணவன்  புத்தக பையின் பட்டியால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளிவிட்டுள்ளான்.

மேலும் சம்பவம் தொடர்பில் கொலையுடன் தொடர்புடைய சிறுவனும் அவனது தந்தையும் கைது செய்யப்பட்டதுடன் பின்னர் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் குறிப்பிட்ட வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாமையால்...

2023-09-25 09:05:35
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீண்டும்...

2023-09-24 19:35:21
news-image

எனக்கு அதிகாரம் கிடைத்தால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ...

2023-09-24 19:27:05
news-image

இன்றைய வானிலை

2023-09-25 06:52:41
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19