இரு வருடங்களாக சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் சிக்கினார்

Published By: Daya

12 Oct, 2018 | 04:07 PM
image

2016 ஆம் ஆண்டிலிருந்து 13 வயதுடைய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமை தொடர்பில் 70 வயது முதியவர் ஒருவரை நேற்று  கைதுசெய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.  

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டியாவள பிரதேசத்தைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

குறித்த சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்வதால் 2016 ஆம் ஆண்டில் இச்சிறுவன் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்துள்ளான்.  

இந்நிலையில் விடுமுறையில் இச்சிறுவன் தனது தாயைப் பார்க்க வீட்டுக்கு வந்த போது சந்தேக நபரான முதியவர் முதல் தடவையாகவும், அதன் பின்னர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது தாயைப் பார்க்க சிறுவன் வந்த போது அச்சிறுவனை அச்சுறுத்தி வீட்டுக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இரண்டாவது தடவையாகவும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு இதனை யாருக்கும் சொல்ல வேண்டாம் என சிறுவனை அச்சுறுத்தியிருப்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் பொரளையிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போது தன்னை முதியவர் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விடயங்களை உறவினரிடத்தில் கூறியுள்ளதோடு அந்த உறவினரால் இது தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த முதியவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபரான முதியவருக்கு பிள்ளைகளும், அவர் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனின் வயதையொத்த பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54