ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் அந்தரங்க உறுப்பை துண்டித்தார் என்ற குற்றச்சாட்டில், 38 வயதுடைய தாயொருவரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஓட்டமாவடியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்தப் பெண், தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, குழந்தையின்அந்தரங்க உறுப்பை துண்டித்துத்துள்ளார்.
குழந்தை கதறி அழவே அயலவர்கள் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM