19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை அணி நேற்று நாடு திரும்பியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29 ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமானது. 8 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டித் தொடரின் குழு ஏ யில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும் குழு பீயில் இலங்கை, பாகிஸ்தான், ஹொங் கொங், வரவேற்பு நாடான பங்களாதேஷும் இடம்பெற்றிருந்தன.
லீக் சுற்றில் தத்தம் குழுக்களின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மற்றும் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியன 4 புள்ளிகளுடன் இரண்டாமிடங்களுடனும் அரையிறுதிக்கு முன்னேறின.
பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
எனினும் இறுதிப் போட்டியில் இந்திய அணி 144 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
இந் நிலையில் தொடரில் இரண்டாவது இடத்தை இலங்கை அணி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM