சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனதுவீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது பெற்றோர் பெங்களூரில் உள்ளனர். சாய் பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது நண்பர்கள் மற்றும் பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய்பிரசாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்போது சாய் பிரசாந்த் வீட்டில் இருந்துபொலிஸார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பக்கத்திற்கு எழுதப்பட்டுள்ள அக் கடிதத்தில்,
எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்த்துக்கு"உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். பொஸஸிவ் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப்படாதே. எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.
எனது காதல் எப்போதும் உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே. ரக்ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர் கண்டிப்பாக உன்னையும் உனது குடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.
என் பெற்றோர் உனக்கு ஐந்து இலட்சம் பணமும், உனது நகையையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.
ரக்ஷிதாவின் புரிதலுக்கு, ஒரு கண்டிஷன் யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்சினை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும். புரிந்துகொள். ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லொட் அம்மா, ரக்ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.
லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார்.
"லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த். உம்மா"
டேக் கேர் எவ்ரிபொடி. உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன். இவ்வாறாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர் ஏற்கனவே திருமணமாகி விவா கரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM