ஞானசார தேரரின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Published By: Vishnu

05 Oct, 2018 | 06:25 PM
image

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. 

தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆறுவருட சிறைத்தண்டனையை நீக்குமாறு கோரி கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவே உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நலின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்தக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி, மூரடங்கிய நீதிபதி குழாமின் பெரும்பான்மை தீர்ப்பிற்கு அமைய அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றசாட்டின் குற்றவாளியான பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44