அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் !

Published By: Daya

05 Oct, 2018 | 04:48 PM
image

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விரைந்து விடுவிக்குமாறு கோரியும் உண்ணாவிரத்தினை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் முல்லைத்தீவில் இன்றையதினம் காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

 பல்வேறு இடங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டு அரசியல் கைதிகாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் மிக நீண்டகாலமாக காரணங்கள் கூறப்படாது வழக்குகள் தொடரப்படாது சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.இவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தபோதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள்  கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் குதித்துள்ளனர்.

 இவர்களுக்கு ஆதரவாகவும் நல்லாட்சி அரசு உடனடியாக இவர்களது வழக்குகளை தொடுத்தோ அல்லது புனர்வாழ்வு அழித்தோ அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்  முன்பாக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தவராஜா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான நடேஷ் குகநாதனின்  மகள்  மனைவி உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும் நல்லாட்சி அரசே சிறையில் இருக்கும் உறவுகளை விடுதலை செய் எங்கள் அரசியல் கைதிகளுக்கு உடன் நீதி வழங்கு அரசியல் கைதிகளின் விடுதலையை அரசே விரைவு படுத்து அரசே பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய் ,  அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு  உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44