அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

Published By: Daya

04 Oct, 2018 | 12:18 PM
image

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் 8 பேர், குறுகியகால புனர்வாழ்வளித்தாவது தம்மை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கண்டி மற்றும் மகசீன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, சகல அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள இப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்பினர், மனிதநேயமுள்ள சமூக செயற்பாட்டாளர்கள் என சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், அவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாகவே விசாரிக்க முடியுமென சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். எனினும், வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் தமது வழக்கை இனியும் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02