இந்தோனேசியாவின் இயற்கை அனர்த்தத்தினால் நிர்மூலமாக்கப்பட்டுள்ள பலுவில் பலியானவர்களை புதைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 850 என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட சடலங்களை ஓன்றாக புதைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
முதலில் 300 பேரை புதைப்பதற்கான புதைகுழிகளை உருவாக்கியுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் மீட்பு பணியாளர்கள் இணைந்து 100 மீற்றர் புதைகுழியொன்றை தோண்டியுள்ளனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் அதனை ஆழமாக்குவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார மற்றும் மத காரணங்களிற்காக இவற்றை உடடினயாக செய்யவேண்டியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஒருமருத்துவமனையிலிருந்து மாத்திரம் 550 உடல்களை கொண்டுவந்துள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
மலைப்பகுதிக்கு அருகில் உள்ள பொதுமயானத்தில் ஆயிரம் உடல்களை புதைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை டிரக் ரக வாகனங்களில் உடல்கள் கொண்டுவரப்படுவதாகவும் தொண்டர்கள் அவற்றை புதைகுழிக்கு இழுத்து சென்று போட்ட பின்னர் மண்ணால் அவற்றை மூடுகின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
பலியானவர்களை உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக உடல்கள் அனைத்தும் புகைப்படமெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் ஒவ்வொரு உடலாக சென்று பார்ப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM