இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் தாக்கப்பட்ட பலுவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் துணைஜனாதிபதி யூசுவ் கலா இதனை உறுதி செய்துள்ளதுடன் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை 350,000 அதிகமான மக்கள் வசித்த பலு நகரத்தில் பெரும்பான்மையானவர்களை காணவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் பலர் இடிபாடுகளின் கீழ் சிக்குண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதியை மீட்பு பணியாளர்கள் இன்னும் சென்றடையாததன் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலு நகரில் இடிபாடுகளிற்குள் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவதற்காக கைகளை பயன்படுத்தி நிலங்களை தோண்டும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.
இடிபாடுகளை அகற்றி உயிருடன் சிக்குண்டுள்ளவர்களை காப்பாற்றுவதற்கும் பலியானவர்களின் சடலங்களை அகற்றுவதற்கும் எங்களிற்கு தற்போது பாரிய இயந்திரங்கள் தேவை என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் தெரிவித்துள்ளன
இதேவேளை பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரான டொன்கலாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகததை மீட்பு பணியாளர்கள்; சுட்டிக்காட்டியுள்ளனர்
இதேவேளை சர்வதேச செஞ்சிலுவை குழு இயற்கை அனர்த்தம் காரணமாக 1இ6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் பலியானவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இடிபாடுகள் வீதியை மூடியுள்ளதாலும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM