ஆட்சி மாறியபோதும் கொள்கை மாறவில்லை

Published By: Raam

14 Mar, 2016 | 08:34 AM
image

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் கொள்­கைகள் மாற­வில்லை. கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் கொள்­கை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா, அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும், வெளி­யேயும் நாம் போராட்­டங்­களை முன்­னெ­டுப்போம் என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா மேலும் கூறு­கையில்,

அர­சாங்கம் வரி­களை அதி­க­ரித்து மக்கள் மீதான வாழ்க்கைச் சுமை­யினை அதி­க­ரித்­துள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம் தற்­போது நெருக்­க­டியில் சிக்­கி­யுள்­ளது. இவ்­வாறு நாட்­டையும் அர­சாங்கம் நெருக்­க­டியில் தள்­ளி­விட்­டுள்­ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

நாட்டில் ஆட்சி மாற்­றமே ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் கொள்கை மாற்றம் ஏற்­பட வில்லை. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­காலக் கொள்­கை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் உள்­ளது அதனை ஏற்றுக் கொள்­கின்றோம். அதனை தீர்ப்­ப­தற்கு முன்­ப­தாக நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும். மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். அதனை விடுத்து எம்.பி.க்களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது.

எனவே அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக ஜே.வி.பி.யினர் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­தினை கோரி­யுள்­ள­தோடு, பொரு­ளா­தார நிலை­மைகள் மற்றும் மக்கள் மீதான வரிகள் தொடர்பில் மக்­களை தெளி­வு­ப­டுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. தேவையென்றால் எதிர்காலத்தில் போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33
news-image

அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் -...

2025-12-11 17:59:28